Wednesday, November 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
the only TAMIZH MAGAZINE IN PRINT MEDIA,(Not Tamilnattu Magazine),Founded By ESPO , Edited by Chithan Prasadh. Anyone from anywhere can write on anything.Except personal attacks on anyone including the poor writers.
12 comments:
மாதுமை கவிதையை வாசித்த பின் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். சித்தன்
சிறந்த கவிதை,கவிஞருக்கு வாழ்த்துகள்.
வணக்கம் சித்தன், தாங்கள் ஒரு மலேசியரா? இவ்வலைப்பதிவை யார் நடத்தி வருகிறார்கள் என்று கூற முடியுமா..?
நன்றி.
கவிதை வாசித்தேன். பெண்ணியக் கவிதைத் தொகுப்புகளும், பெண் மனம், வலி, மணம் சார்ந்த கவிதைகளும் என்னுடைய சுவாசம். இதுவரை வாசிக்கப்பட்ட படைப்புகளீலிருந்து தங்கள் படைப்பு என்னை வெகுவாக கலவரப்படுத்தியிருக்கிறது,குறிப்பாக அம்மாக்கள் கவிதை.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
உலகப்பொதுமை னோக்கிய பெண்ணின் வலி, தாய்மையின் சுமை, உலகத் தாய்களின் பாரிய சோகம் இது.மாதுமைக்கு பாராட்டுக்கள்.'மை'யில் பார்த்த கவிதை ஒன்று,
"தாயின் கரு உதிர்த்த
ஒரு பிள்ளையை தானும் கொல்லும் அதிகாரத்தை
இனத்தின் பெயராலும்,மதத்தின் பெயராலும்...யாரும் எடுப்பாரனில் கருவில் கரைக என் பிள்ளாய்."
-வாசுகி-
யசோதா. பத்மனாதன்.
யுத்தம் அதனூடான அல்லது வாழ்வுக்கான அலைச்சல் அம்மாக்களின் முகங்களை தின்னுகின்ற யதார்த்தத்தை மாதுமை எழுதியிருக்கிறார். இந்தக்கவிதையின் மொழி மிகவும் செம்மையானது உள்ளடக்கம் பெரியது எல்லைகளை மீறி பேசுகிற பாங்கை காணுகிறேன்.
அம்மாக்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்தனர்
உலக துயரங்களைச் சுமக்க
கையில் வந்துவிட்ட உலகம் தனக்குள் சிதைந்து கொண்டிருப்பதை அம்மாக்களின் மொழிகள் பிரதிபலிப்பதை மாதுமை எழுதியிருக்கிறார்.
நமக்குரிய ஒரு நல்ல கவிதை. வித்தியாசமான வடிவம்.
மாதுமை மகிழ்ச்சியாக இருக்கிறது.
தீபச்செல்வன்
கவிதையைக் விட அந்த கடிதம் சக்தி வாய்ந்ததாக எனக்குப் படுகிறது. அந்த கடிதம் இல்லாமல் இந்த கவிதை முழுமை அடைந்திருக்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. நவின கவிதைகளின் சிக்கல் இது தானா என்று தெரியவில்லை. சில சமயத்தில் பின்புலத்தோடு அணுகப்படும் கவிதைகள், புதிய பரிமாணத்தை காட்டி விடுகின்றன. மாதுமைக்கு வாழ்த்துகள்
அம்மாக்களுடைய துயரம் அளப்பரியதுதான். எங்களால் போராளிகளாகப் பார்க்கப்படுகிறவர்கள் ஒரு தாயின் கண்களில் குழந்தையாகவே தோன்றுவர். தாய்மையின் வலி உலகப்பொதுமையானது என்பதை மாதுமையின் கவிதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறது. சந்திரசேகரன் கிருஷ்ணன் சொன்னதுபோல் அந்தக் கவிதையின் செறிவைக் கூட்டியிருக்கிறது அம்மாவின் கடிதம். நிலங்கள்தான் வேறு... தாய்மையின் உணர்வுகள் ஒன்றுதான்.
இன்றைய சூழ்நிலையை
எந்த ஆரவாரமுமின்றி
கூர்மையான் முன்
வைத்திருக்கிறார் கவிஞர்
மாதுமை
அம்மாக்கள் எப்போதும் அம்மாக்கள்தான்.
போரோ அன்றி வேறேதுமோ ஒவ்வொரு உயிரையும் சிதைக்கும் போது அதையும் விட அதிகமாக மனம் சிதைந்து, வலி சுமக்கும் அம்மாக்கள் பற்றிய கவிதை
அருமை. பாராட்டுக்கள்.
உலகின் எம்மூலையிலிருந்தாலும், தாய்க்குலம் துயரங்களைத்தான் அனுபவித்துக்கொண்டுள்ளது என்பதை இக்கவிதையின் மூலம் சித்தரித்திருக்கிறார் கவிஞர்.
பாராட்டுக்கள்!
- கிரிஜா மணாளான்
செயலர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.
இன்று (26.01.2008) திருச்சியில் நிகழ்ந்த "யுகமாயினி இலக்கியக் கூடல்" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நான், கவிதைகளைப்பற்றி ஆய்வுரை நிகழ்த்திய ந்ண்பர் இலக்குமி குமாரன் இக்கவிதையை வாசித்தபோது பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கரவொலியைக் கண்டு மகிழ்ந்தேன். இன்று காலைதான் இக்கவிதையை வாசித்து, மிகவும் ரசித்து, என் கருத்துக்களை இங்கே எழுதி யிருந்தேன். சிறந்த கவிதைகளுக்கு ஊக்கமளித்து, அக்கவிஞர்களைப் பாராட்டும் பண்புள்ள என் சக படைப்பாளர்களும் இக்கவிதைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கவிஞருக்கு எங்கள் படைப்பாளர் அமைப்பின் சார்பில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சி 620021.
Post a Comment