Tuesday, September 29, 2009

பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்




சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:

www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com

http://groups.google.com/group/palsuvai

http://groups.google.co.in/group/clapboard

http://groups.google.com/group/kamathenu


கடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.

தற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.

இந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.

இம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்னெடுப்போர்:

"யுகமாயினி" சித்தன்: 9382708030
கவிஞர்.அன்பாதவன்: 9500102765
கவிஞர்.அரங்க மல்லிகா: 9842979756

(பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள் நாளை இங்கே பதிவேற்றப்படும்)

1 comment:

பித்தனின் வாக்கு said...

கண்டிப்பாக செய்யவும். இது குறித்து செய்திகளை இங்கும் அழைப்பு செய்யவும்.

mailto:singaiblogers@googlegroups.com